Home மாவட்ட செய்திகள்தெற்கு மாவட்டம்கன்னியாகுமரி 2 தினங்களில் திருமணம்… காதலனை கைப்பிடிக்க தப்பியோடிய பெண்…போலீசில் தஞ்சம்…!!

2 தினங்களில் திருமணம்… காதலனை கைப்பிடிக்க தப்பியோடிய பெண்…போலீசில் தஞ்சம்…!!

by Revathy Anish
0 comment

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீராம்(24) என்பவர் பெத்தேல் புரத்தை சேர்ந்த பெமிஷா(23) என்ற பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெமிஷாவை வீட்டில் பூட்டி வைத்து வேறு மாப்பிளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் எப்படியாவது காதலை கரம் பிடிக்க வேண்டும் என உறுதியாக இருந்த பெமிஷா வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் கூறுவதாக நடித்துள்ளார். இதனையடுத்தது வருகின்ற 8-ஆம் தேதி அவருக்கு திருமணம் நடக்க இருந்தது. நாட்கள் நெருங்குவதை பார்த்து அச்சமடைந்த பெமிஷா அவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பியோடியுள்ளார். மேலும் அவர் ஸ்ரீராமுடன் குளச்சல் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

இதனை அறிந்த பெண் வீட்டார் காவல்நிலையத்திற்கு சென்று பெமிஷாவை எங்களுடன் அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களை பிரிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்களை பதிவு திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுத்தி காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.