Home » நண்பர்களுக்கு அனுப்பிய செய்தி… ஆன்லைன் கிரிக்கெட்டால் பலியான உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுக்கு அனுப்பிய செய்தி… ஆன்லைன் கிரிக்கெட்டால் பலியான உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

by Revathy Anish
0 comment

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வடதாரை காமராஜபுரத்தில் வசித்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் பைனான்ஸ் ஒன்றில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை பார்க்கும் பைனான்சில் சம்பளம் சரிவர தராததால் வீட்டு செலவிற்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் மீண்டும் கடன் வாங்கி ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி தோற்று அதிக கடனாளியாக மாறினார். ஒரு கட்டத்திற்கு மேல் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனை சமாளிக்க முடியாமல் பாலகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் விரக்தியில் விஷம் அருந்திவிட்டு அவரது நண்பர்களுக்கு எனக்கு வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்ள விஷம் அருந்தியதையும், அவர் இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும் போது பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த தாராபுரம் போலீசார் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு சரண்யா என்ற மனைவியும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.