குடும்ப தகராறால் பறிபோன மாமியார் உயிர்… மனைவிக்கு தீவிர சிகிச்சை… தொழிலாளி கைது…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்ணப்பன்குளம் பகுதியில் வீரக்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் ரஞ்சிதா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஞ்சிதா வீரக்குமாரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று ரஞ்சிதாவும், அவரது தாய் சாந்தியும் வண்டி பேட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த வீரக்குமார் அவர்களிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது வீரக்குமார் அவர் வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி மற்றும் மாமியாரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காயம் அடைந்த இருவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சாந்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த ரஞ்சிதா தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வீரக்குமாரை கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!