தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி… என்கவுண்டரில் தூக்கிய போலீசார்… அதிகாரிகள் தகவல்…!!

திருச்சி மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்த ரவுடி துரை என்பவர் மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் ஏற்கனவே 2023-ல் விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி துரை புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையறிந்த ஆலங்குடி போலீசார் அவரை பிடிக்க சென்ற போது போலீசாருக்கும் ரவுடி துரைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது துரை காவல்துறையினரை தாக்கியுள்ளார். இதனால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் 2022-ல் கொலை செய்யப்பட்ட ரவுடி இளவரசன் வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!