Home செய்திகள் நேற்று தொடங்கிய அணுமின் உற்பத்தி… ஏற்பட்ட பழுதால் திடீர் நிறுத்தம்… அதிகாரிகள் தகவல்…!!

நேற்று தொடங்கிய அணுமின் உற்பத்தி… ஏற்பட்ட பழுதால் திடீர் நிறுத்தம்… அதிகாரிகள் தகவல்…!!

by Revathy Anish
0 comment

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது உலையில் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மே மாதம் 13-ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2 மாதங்களாக நடந்த வந்த பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில் நேற்று 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த நிலையில் இன்று காலை மீண்டும் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனை சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் அணுமின் நிலையத்தில் 3,4,5,6-வது உலைகளின் கட்டுமான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.