Home செய்திகள் இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்… ஆய்வாளர் உள்பட 4 பேர் கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்… ஆய்வாளர் உள்பட 4 பேர் கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

by Revathy Anish
0 comment

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் கணவனை இழந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த நிலையில் அந்த அலுவலகத்தில் குருவையா என்பவர் பணிபுரிந்தார்.

இந்நிலையில் குருவையா மீது அதிக புகார் எழுந்த நிலையில் அவரை தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி மாற்றம் செய்தனர். இதனையடுத்து குருவையா தனது செல்போனில் இருந்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அந்த இளம்பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சிலர் கிண்டல் செய்த நிலையில் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆய்வாளர் குருவையா, காந்திநகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார், ராஜா, சண்முகப்பிரபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.