Home செய்திகள் மூதாட்டி கொலை வழக்கு… கையும் களவுமாக சிக்கிய தாய்-மகன்… போலீசார் விசாரணை…!!

மூதாட்டி கொலை வழக்கு… கையும் களவுமாக சிக்கிய தாய்-மகன்… போலீசார் விசாரணை…!!

by Revathy Anish
0 comment

திருப்பத்தூர் மாவட்டம் பலப்பநத்தம் பகுதியில் அனுமக்கா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவராஜ்க்கு திருமணம் முடிந்து மலர் என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அனுமக்கா வீட்டில் தலையணையால் அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதனையடுத்து போலீசார் அவரது மருமகள் மலர் மற்றும் பேரன் சிவகுமாரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சம்பவத்தன்று சிவகுமார் தனது பாட்டியான அனுமக்கா வீட்டிற்கு சென்று மது அருந்த பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சிவகுமார் பாட்டி என்றும் பாராமல் தலையணையை வைத்து அவரது முகம் மற்றும் கழுத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார்.

மேலும் அனுமக்கா அணிந்திருந்த 1 1/2 பவுன் சங்கிலி கொலுசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தனது தாயான மலரிடம் கொடுத்து நடந்ததை கூறியுள்ளார். அவரது தாயும் இதை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என கூறியுள்ளதாக சிவக்குமார் போலீசாரிடம் தெரிவித்தார். இந்நிலையில் காவல்துறையினர் மலர் மற்றும் சிவக்குமாரை கைது செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.