ஆர்ப்பரித்து கொட்டும் நீர்… ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை… ஆட்சியரின் உத்தரவு…!!

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் கபினி அணை முழு கொள்ளளவையும் எட்டியதால் அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அதேபோல் கிருஷ்ணசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் அதிக நீர்வரத்து ஏற்பட்டு அருவிகளிலும், ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவி பகுதியில் பரிசலை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் ஒகேனக்கல் பகுதிகளில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!