மத்திய பஜ்ஜெட் நகலை எரித்து போராட்டம்… ஐக்கிய விவசாயிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஐக்கிய விவசாயிகளின் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. எனவே வருகின்ற 31-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மத்திய பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாவட்டம் முழுவதிலும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இந்திய கூட்டணி கட்சியினர் ஆதரவு அளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!