தயார் நிலையில் உள்ள ரயில்வே மேம்பாலம்… விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை…!!

சென்னை பட்டாபிராம் சாலையில் உள்ள சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை குறுக்கே ரயில்வே பாதை இருந்ததால் அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனை தடுக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வேத்துறை சார்பில் 52.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அப்பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பல்வேறு காரணங்களால் தாமதமான மேம்பால பணிகள் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. தற்போது இந்த பாலத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வர்ணம் பூசி தயார் நிலையில் உள்ளது. எனவே இந்த பாலத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!