தகராறில் ஆத்திரம்… கொதிக்கும் நீரை ஊற்றிய குடும்பத்தினர்… படுகாயமடைந்த கணவன்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உலகாணி பகுதியில் கருப்பு(32) என்பவர் வசித்து வருகிறார். லாரி ஓட்டுனரான இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால்முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஜோதிமணி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜோதிமணியின் தாய் தந்தையும் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கருப்புவை வீட்டை விட்டு வெளியேறுமாறு அவரது மாமனார் மாமியார் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த மனைவி, மாமனார்,மாமியார் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து கருப்பு மீது இரக்கமின்றி ஊற்றியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்து துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கூடகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜோதிமணி, அவரது தந்தை முருகன், தாயார் மாணிக்கவல்லி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!