தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க பரிந்துரை… கொலீஜியம் கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஆர்.மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையில் கொலீஜியம் கூடியது. அப்போது மும்பை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணிபுரியும் கே.ஆர். ஸ்ரீராமை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

தற்போது ஐகோர்ட்டில் தலைமை பொறுப்பு நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவனையும், ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான என்.கோட்டீஸ்வர் சிங்கையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்துள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!