பள்ளிக்கு போகாததால் கண்டிப்பு… மாணவனின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

கோவை மாவட்டம் ஒக்கிலிபாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிமுருகன் என்பவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மூத்த மகனான முத்துகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சரியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவரது தாயார் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் முத்துகிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலையில் பழனிமுருகன் மற்றும் அவரது மனைவி வழக்கம் போல வேலைக்கு சென்ற நிலையில் முத்துகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற செட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முத்துகிருஷ்ணன் உடலை உடற்கூறு ஆய்விற்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!