தமிழகத்திற்கு மது விற்பனை…. குண்டாஸ் வழக்கு போடப்படும்…. புதுச்சேரிக்கு எச்சரிக்கை….!!

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மது விற்பனை செய்தால் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்ததை கண்டித்து மதுக்கடை உரிமையாளர்கள் துணை ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடை உரிமையாளர்களிடம் புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மதுபானம் விற்பனை செய்தால் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மேற்கு பகுதி எஸ்.பி எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மதுபான கடை உரிமையாளர்கள் கலால் துறை துணை ஆளுநரிடம் தங்களின் மதுபான கடை உரிமத்தை ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.

Related posts

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!

உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா…விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு…!!!

திருப்பதி லட்டு விவகாரம்…நந்தினி நெய் பயன்படுத்த உத்தரவு…!!!