13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 8 பேர் கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக சிவராமன்(32) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு சிவராமன் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது காந்திக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவராமனை தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் என 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அதே பள்ளியில் படிக்கும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை சிவராமனை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!