சதுரகிரி மலைக்கோவிலில் சிறப்பு பூஜை… பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி…!!

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி பூஜைகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கிற்கும் வகையில் நாளை முதல் வருகின்ற 20-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சதுரகிரி மலைப்பகுதியில் ஏரி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாளை சனி பிரதோஷம் என்பதால் வழக்கத்தை விட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு அதிக அளவில் வருகை தருவார்கள்.

எனவே அப்பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 4 நாட்களில் கனமழை பெய்தால் பாதுகாப்பு கருதி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும், பக்தர்கள் இரவில் மலைப்பகுதியில் தங்கக்கூடாது எனவும் வனத்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!