இராமநாதபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் அத்துமீறும் இலங்கை கடற்படை… 25 மீனவர்கள் கைது… மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை…!! Revathy Anish1 July 202404 views கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே 25 தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். அவர்களுடைய விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரித்த போது அந்த மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவிற்கு மீன் பிடிக்க சென்றது தெரிவந்தது. மேலும் நாளுக்கு நாள் இலங்கை கடற்படையினர் அத்துமீறி செயல்படுவதாக கூறிய தமிழக மீனவர்கள், இவர்களின் அட்டகாசத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கேட்டு கொண்டனர்.