வாலிபரின் வலையில் சிக்கிய மாணவி… தாய் அளித்த புகார்… போக்சோ சட்டத்தில் அதிரடி கைது…!!

விருதுநகர் மாவட்டம் கானா விலக்கு பகுதியில் முத்துராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் குடிநீர் கேன் வினியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியுடன் முத்துராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன் வலையில் சிக்க வைத்த முத்துராஜ் அவரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் மாணவி கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது. இதனை அறிந்து மாணவியின் தாயார் வாலிபர் மீது எம்.ரெட்டியப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் முத்துராஜை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!