மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளியில் ஓவிய கலை பிரிவு ஆசிரியராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் பாலியல் தொல்லை அளித்த ராமச்சந்திர சோனியை பள்ளி நிர்வாகம் சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். இதை அடுத்து போலீசார் ராமச்சந்திர சோனி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போல் 15 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!