கரும்பு ஜூஸ் கடைக்கு ஆள் தேவை…. பட்டப் படிப்பு முக்கியம்…. வைரலாகும் பேனர்….!!

திருச்செந்தூர் அருகே மெய்ஞானபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை என்று வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த பேனரில் கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை, சம்பளம் 18,000 என்றும் வேலை நேரம் காலை 8.30 மணி முதல் இரவு 9:30 மணி வரை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதோடு கல்வித் தகுதியாக பி.பி.ஏ., பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும் வயதுவரம்பு 25 முதல் 40 வரை என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை என்று கல்வித் தகுதி போட்டு பேனர் வைத்தது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!