Home செய்திகள் தப்ப முயன்ற வாலிபர்கள்… சுட்டு பிடித்த போலீசார்… பெங்களூரு அருகே பதற்றம்…!!

தப்ப முயன்ற வாலிபர்கள்… சுட்டு பிடித்த போலீசார்… பெங்களூரு அருகே பதற்றம்…!!

by Revathy Anish
0 comment

பெங்களூருவில் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போதை பொருள் விற்ற வாலிபரை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர். சுங்கச்சாவடி அருகே 3 வாலிபர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் தப்பி ஓட முயற்சித்த நிலையில் ஒரு வாலிபர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினரை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். மற்றும் 2 வாலிபர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களையும் தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.