சொத்து பிரச்சனையில் பயங்கரம்… தந்தை, மகன் செய்த கொடூரம்… வாலிபர் பலி…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சிறுமருதூர் பகுதியில் கண்ணையா(60) என்பவர் வசித்து வருகிறார் விவசாய இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ்(27) என்ற 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளார், இந்நிலையில் கண்ணையா தனது மகளுக்கு வீடு கட்டுவதற்காக இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த மகன் சுரேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கண்ணையா மற்றும் இளைய மகன் ரமேஷ் இருவரும் சேர்ந்து சுரேஷ் தாக்கி அவரது கழுத்தை நெரித்துள்ளனர். இதனால் மூச்சு திணறி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற எஸ்.பி மங்கலம் காவல்துறையினர் கண்ணையா மற்றும் ரமேஷ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுரேஷின் உடலை வீட்டில் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!