மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அந்த ஆட்டோவை ஓட்டிய முதியவர் மிகவும் சரளமாக ஆங்கிலம் பேசினார். இதனை கண்டு ஆச்சரியமடைந்த அந்த நபர் உடனடியாக அவரது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அப்போது ஆட்டோ டிரைவர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள், உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் லண்டன், அமெரிக்கா, பாரிஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு போகலாம் என்று கூறினார்.
இந்த வீடியோவை தாது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அந்த நபர் ஆச்சரிய மனிதரை சந்தித்தேன் என்றும், அவரின் ஆங்கில புலமையை கண்டு நானே ஒரு கட்டத்தில் தருமாறி திகைத்து விட்டதாக தெரிவித்தார். மேலும் அவர் மிகவும் வேடிக்கையாக உரையாடினார் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ஆட்டோ டிரைவரை பாராட்டி வருகின்றனர்.