திடீரென தீப்பிடித்த பஸ்… டிரைவரின் செயலால் தப்பித்த பயணிகள்… குவியும் பாராட்டுகள்…

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் கார்த்திகேயன் உடனடியாக பேருந்து நிறுத்தி உள்ளே இருந்த பயணிகளை வெளியேறும்படி கூறியுள்ளார். இதனையடுத்து பேருந்துக்குள் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பேருந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தது என தெரியவந்தது.மேலும் இந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் பிழைத்தனர். டிரைவர் கார்த்திகேயன் துரிதமாக செயல்பட்டு பயணிகளை வெளியேற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!