Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்ஈரோடு வீட்டிற்குள் புகுந்த யானை… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டிற்குள் புகுந்த யானை… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

by Revathy Anish
0 comment

ஈரோடு மாவட்டம் மணல்மேடு வனப்பகுதி அருகே தூரம் மொக்கை பகுதியில் கனகராஜ்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கனகராஜ் தனது குடிசையில் தூங்கி கொண்டிருக்கும் போது யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தூரம் மொக்கை பகுதிக்கு வந்துள்ளது.

அப்போது அந்த யானை கனகராஜ் குடிசையை உடைத்து சேதப்படுத்தியது. இதனையடுத்து கனகராஜ் எழுந்து பார்த்தபோது யானை அவரது அருகே நின்று கொண்டிருந்தது. மேலும் அந்த யானை அவரை காலால் மிதித்து அங்கிருந்து சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டும் கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.