Home செய்திகள் அண்ணன் கண்முன்னே நடந்த பயங்கரம்… தங்கை துடிதுடித்து பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அண்ணன் கண்முன்னே நடந்த பயங்கரம்… தங்கை துடிதுடித்து பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

by Revathy Anish
0 comment

சென்னை ஐ.சி.எப். காலனியில் உள்ள அம்பேத்கர் நகரில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன்(28) என்ற மகனும், ஹேமமாலினி(24) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று அண்ணன்-தங்கை இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் இரவு அண்ணாநகரில் பணிபுரியும் தாயை பார்ப்பதற்கு அங்கு புறப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 100 அடி சாலை அருகே வந்தபோது பள்ளத்தில் மோதி இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்தது.

அப்போது வலதுபுறம் சாலையில் விழுந்த ஹேமமாலினி மீது பின்னல் வந்து கொண்டிருந்த லாரி அவர் மீது ஏறி இறங்கி நிற்காமல் வேகமாக சென்றது. இந்த சம்பவதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் வெங்கடேசன் உடலில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமமாலினி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.