மனைவியை வெட்டிய கணவன்… அச்சத்தில் செய்த விபரீத செயல்… மதுரை அருகே பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சம்சுதீன் பாத்திமாவுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பாத்திமாவை வெட்டியுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து பாத்திமாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததில் அச்சமடைந்த சம்சுதீன் வீட்டில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாத்திமா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!