புதிய சட்டங்கள் சட்ட விரோதமானது… நீதிமன்றத்தில் மனு அளித்த ஆர்.எஸ். பாரதி… இன்று விசாரணை…!!

மத்திய அரசால் ஜூலை 1-ஆம் தேதி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றி இருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

மேலும் நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் கருத்தை கேட்காமலும், எவ்வித விவாதங்களின்றி அமல்படுத்தப்பட்ட இந்த சட்டங்களை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் மற்றும் எஸ் எஸ் சுந்தர் ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!