Home செய்திகள் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் விசாரணை…!!

by Revathy Anish
0 comment

தருமபுரி மாவட்டம் காட்டுவளைவு பகுதியை சேர்ந்த மணி என்பவர் சேலம் மேச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் ஓமலூரில் இருந்து மேச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் மணி படுகாயம் அடைந்தார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி மணி பரிதமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.