Home செய்திகள் பேசுவதை நிறுத்திய பெண்… காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்… வாலிபருக்கு வலைவீச்சு…!!

பேசுவதை நிறுத்திய பெண்… காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்… வாலிபருக்கு வலைவீச்சு…!!

by Revathy Anish
0 comment

விருதுநகர் மாவட்டம் அல்லிக்குளம் பகுதியில் பீமராஜ்(35), நாகலட்சுமி(25) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பிரீத்ராஜ்(3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகலட்சுமி அடிக்கடி மத்தியசேனை பகுதியை சேர்ந்த அவரது உறவினரான ராஜபாண்டியன்(26) என்பவருடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கணவர் பீமராஜ் அவரை கண்டித்துள்ளார்.

இதனால் நாகலட்சுமி ராஜபாண்டியனுடன் பேசுவதை தவிர்த்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நாகலட்சுமி, குழந்தை சம்பிரீத்ராஜ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி ஆகியோர் காரியாபட்டிக்கு சென்றனர். அங்கு வந்த ராஜபாண்டியன் அவர்களிடம் வீடு வரை கொண்டு சென்று விடுவதாக கூறியுள்ளார். இதனை கேட்ட நாகலட்சுமி, பிரியதர்ஷினி மற்றும் சம்பிரீத்ராஜ் ஆகியோர் அவரது இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றனர்.

அப்போது எஸ்.கல்லுப்பட்டி விலக்கு அருகே பிரியதர்ஷினி மற்றும் சிறுவன் சம்பிரீத்ராஜ் ஆகியோரை அங்கே விட்டுவிட்டு நாகலட்சுமியை ராஜபாண்டியன் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து ராஜபாண்டியன் மட்டும் திரும்பி வந்ததால் பிரியதர்ஷினி அவரிடம் நாகலட்சுமி எங்கே என கேட்டார். அதற்கு அவர் காட்டுப்பகுதியில் பிணமாக கிடப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காரியாபட்டி போலீஸ் காட்டுப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த நாகலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜபாண்டியனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.