கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி… 2வது நாளாக குளிக்க தடை… குமரியில் கொட்டி தீர்க்கும் மழை… Revathy Anish28 June 202405 views கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிறுவர் பூங்கா வெள்ளத்தில் சூழ்ந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் பேரூராட்சி சார்பில் அருவியில் 2-வது நாளாக குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் தொடந்து பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துகொண்டே வருகிறது. பேச்சிப்பாறை அணை மற்றும் பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் 4,048 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறை, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.