சங்கிலி காணாததால் பதற்றம்… களத்தில் இறங்கிய 50க்கும் மேற்பட்டோர்… குவிந்த பாராட்டுகள்…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த பெண் ஒருவர் கடலில் குளித்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை தவறி கடற்கரையில் விழுந்துள்ளது. தங்க சங்கிலி காணாததை கண்டு பதற்றம் அடைந்த பெண் உடனடியாக அப்பகுதியில் இருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் உனடியாக சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் என 50 பேரை வரவழைத்து சங்கிலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த தேடுதல் வேட்டையின் பலனாக பெண் தவறவிட்ட 5 பவுன் தங்க சங்கிலி கிடைத்தது. அதனை உரிமையாளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் அந்த பெண் மற்றும் அங்கிருந்த அனைவரும் போலீசாரையும் நகையை மீட்டெடுத்தவர்களையும் மனதார பாராட்டினார்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!