செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் வனத்துறையில் பணியிடங்கள்… டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்புவோம்… அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு…!! Revathy Anish23 July 20240110 views நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் வனத்துறையில் யானைகளை கண்காணிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்பும் வகையில் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் புதிய பணியாளர்களை நியமிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக முதலமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளார். மேலும் மாஞ்சோலையில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து நிதி ஒதுக்கப்படுமா என்ன பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.