விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு… 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு… அதிகாரிகள் தீவிர சோதனை…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் பிரச்சாரம் நேற்று ஆரவாரத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நாளை மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கு 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என 1,104 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் விக்கிரவாண்டி தேர்தலுக்கு பல அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருவதால் அப்பகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பிற்கு போலீசார், சிறப்பு காவல்படை மற்றும் துணை ராணுவம் என 2,000க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!