Home செய்திகள் மக்களுக்கு எச்சரிக்கை… ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு… ஆட்சியர் நேரில் ஆய்வு…!!

மக்களுக்கு எச்சரிக்கை… ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு… ஆட்சியர் நேரில் ஆய்வு…!!

by Revathy Anish
0 comment

கர்நாடகா அணையில் இருந்த அதிக அளவில் நீர் திறக்கப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 65 ஆயிரம் அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆறு மற்றும் அருவிகளில் பகுதிகளில் தண்ணீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் நாளை நீர்வரத்து அதிகமாகும் என்பதால் காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர், ஊர் காவல் துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.