Home » பவானிசாகரில் இருந்து நீர் திறப்பு… 60.24 அடியாக உயர்வு… பருவமழையால் அதிகரிக்கும் நீர்மட்டம்…!!

பவானிசாகரில் இருந்து நீர் திறப்பு… 60.24 அடியாக உயர்வு… பருவமழையால் அதிகரிக்கும் நீர்மட்டம்…!!

by Revathy Anish
0 comment

கடந்த 2 நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் பகுதியில் கனமழை பெய்துவருவதால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கு உதவியாகவும் பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொண்ட இந்த அணை நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7,781 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் நீர்மட்டம் 60.24 அடியாக உயர்ந்துள்ளது. எனவே மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு அணையில் இருந்து 200 அடி நீர் பவானி ஆற்றுக்கும், 5 கனஅடி நீர் கீழ் பவானி வாய்க்காலுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெறுவார்கள்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.