ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் பவானிசாகரில் இருந்து நீர் திறப்பு… 60.24 அடியாக உயர்வு… பருவமழையால் அதிகரிக்கும் நீர்மட்டம்…!! Revathy Anish27 June 202408 views கடந்த 2 நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் பகுதியில் கனமழை பெய்துவருவதால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கு உதவியாகவும் பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொண்ட இந்த அணை நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7,781 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் நீர்மட்டம் 60.24 அடியாக உயர்ந்துள்ளது. எனவே மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு அணையில் இருந்து 200 அடி நீர் பவானி ஆற்றுக்கும், 5 கனஅடி நீர் கீழ் பவானி வாய்க்காலுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெறுவார்கள்.