அறையில் நடந்தது என்ன…?உடல்நலம் சரியில்லை என்று கூறி சென்ற மாணவன் தற்கொலை…!!

தர்மபுரி மாவட்டம் அதங்கம்பாடி பகுதியில் வசித்து வந்த ஆனந்தன் என்பவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி. ஃபார்ம் படித்து வந்துள்ளார். இவருடன் அறையில் தங்கியிருந்த 4 மாணவர்களும் விடுமுறை தினத்தில் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ஆனந்தனுடன் அவரது நண்பர் சண்முகம் என்பவர் அறையில் இருந்தார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ஆனந்தன் உடல்நலம் சரி இல்லை என கூறிவிட்டு 11 மணிக்கு மீண்டும் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கல்லூரி முடிந்த பின்பு மாலையில் சண்முகம் அறைக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அவர் வெகு நேரமாக கதவை தட்டியும் ஆனந்தன் திறக்காததால் அவர் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தார்.

அப்போது ஆனந்தன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!