Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்கடலூர் வீட்டிற்குள் நடந்தது என்ன…? தாய், மகன், பேரன், உடல் கருகி பலி…அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!!

வீட்டிற்குள் நடந்தது என்ன…? தாய், மகன், பேரன், உடல் கருகி பலி…அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!!

by Revathy Anish
0 comment

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிகுப்பம் பகுதியில் கமலேஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த இவர் தனது மகன் சுகந்தன்(40) மற்றும் பேரன் நிஷான் ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வந்ததாக அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லிக்குப்பம் போலீசார் காமலேஸ்வரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கமலேஸ்வரி, சுகந்தன், நிஷான் ஆகியோர் உடல் எரிந்து கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.