இவ்வளவு நேரம் எங்க போன…? மனைவியை கொலை செய்த கணவன்… கூடலூர் அருகே பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டம் மச்சிக்கொல்லி பேபி நகரில் ரவிசந்திரன் என்பவர் தனது மனைவி குஞ்சுவுடன் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கர்நாடகாவிற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் இரவில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் ரவிசந்திரன் அவரிடம் இவ்வளவு நேரம் எங்கே சென்றிருந்தாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அவர்களுக்குள் தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த ரவிசந்திரன் அங்கிருந்த கட்டையை எடுத்து குஞ்சுவை பலமாக தாக்கினார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மறுநாள் காலையில் அவர்கள் வெளியே வராததை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது குஞ்சு உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர். மேலும் குஞ்சுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!