Home செய்திகள் தந்தை எங்கே…? 2 பெண் குழந்தைகள் கொலை… மரக்காணம் அருகே பரபரப்பு…!!

தந்தை எங்கே…? 2 பெண் குழந்தைகள் கொலை… மரக்காணம் அருகே பரபரப்பு…!!

by Revathy Anish
0 comment

புதுவை மாவட்டம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆனந்த வேலு என்பவர் தனது மனைவி கவுசல்யா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆனந்த வேலு தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேடுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து அவர் 2 நாளாக வீட்டிற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் கூனிப்மேடு கடற்கரை பகுதியில் ஒரு பெண் குழந்தையும், அனுமந்தை குப்பம் கடற்கரை ஓரம் மற்றொரு பெண்குழந்தையும் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மரக்காணம் போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்தது ஆனந்த வேலுவின் குழந்தைகள் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆனந்த வேலுவின் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்த நிலையில் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குடும்ப தகராறு காரணமாக ஆனந்தராஜ் தனது குழந்தைகளுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குழந்தைகளை கொலை செய்து விட்டு அவர் தப்பியோடியுள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.