கொலையாளி யார்…? தாய், மகன், பேரன் மர்ம மரணம்… 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை…!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிகுப்பம் பகுதியில் கமலேஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த இவர் தனது மகன் சுகந்தன்(40) மற்றும் பேரன் நிஷான் ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வந்ததாக அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லிக்குப்பம் போலீசார் காமலேஸ்வரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கமலேஸ்வரி, சுகந்தன், நிஷான் ஆகியோர் உடல் எரிந்து கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சுமந்தகுமார் வேலை பார்த்த ஹைதராபாத்தில் உள்ள ஐ.டி கம்பெனியிலும் ஒரு தனிப்படை சென்று விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து அவரது அக்கம்பக்கத்து வீடு, உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 150 பேரிடம் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுகந்தன், காமலேஸ்வரி ஆகியோரின் செல்போன் எண்களை வைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசார் நெல்லிக்குப்பம் பகுதியில் முகாமிட்டு கொலையாளிகளை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!