Home » ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? டி.எஸ்.பி. உள்பட 9 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி. அதிரடி…!!

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? டி.எஸ்.பி. உள்பட 9 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி. அதிரடி…!!

by Revathy Anish
0 comment

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 65 பேர் உயிரிழந்த நிலையில், 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் 2 டி.எஸ்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைதான கண்ணுக்குட்டி என்பவரிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி., மற்றும் 7 போலீசாருக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் கருணாபுரத்தில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.