Home செய்திகள் மளமளவென பரவிய தீ… பிளாஸ்டிக் குடோன் சேதம்… தாம்பரம் அருகே பரபரப்பு…!!

மளமளவென பரவிய தீ… பிளாஸ்டிக் குடோன் சேதம்… தாம்பரம் அருகே பரபரப்பு…!!

by Revathy Anish
0 comment

சென்னை தாம்பரம் அருகே உள்ள திருநீர்மலையில் தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இரவு 11.30 அளவில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ வேகமாக பரவியதால் கிண்டி, சைதாப்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 10 வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் விபத்து ஏற்படும் போது குடோனில் இருந்த 20 வடமாநில தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டு வெளியே வந்ததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.