Home செய்திகள் தூக்கில் தொங்கிய மனைவி… வெற்று ஊசியை செலுத்திக்கொண்ட கணவர்… தென்காசி அருகே சோகம்…!!

தூக்கில் தொங்கிய மனைவி… வெற்று ஊசியை செலுத்திக்கொண்ட கணவர்… தென்காசி அருகே சோகம்…!!

by Revathy Anish
0 comment

சேலம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருவேங்கடம் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் இனியவன் மருத்துவ பயிற்சிக்காக வெளியூர் செல்ல இருந்த நிலையில் சவுமியாவை சேலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரவு அறையில் தூங்க சென்ற சவுமியா வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் இனியவன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அவரது மனைவி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சவுமியாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தன் காதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் இனியவன் திடீரென மருந்து இல்லாத வெற்று ஊசியை தன் உடலில் செலுத்திக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.