ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் சுற்றித்திரிந்த காட்டு யானைகள்… வாகன ஓட்டிகளின் செயல்… வனத்துறையினர் எச்சரிக்கை…!! Revathy Anish16 August 2024058 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறி அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு சுற்றி திரிந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையின் வாகனங்களை நிறுத்தி தங்களது செல்போன்களில் யானை கூட்டத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர். இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பின்பு யானை கூட்டம் அங்கிருந்து கலைந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் யானைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஒட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், வாகனத்திலிருந்து இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.