உடலுறுப்புகள் தானம் செய்த பெண்… 6 பேர் பயனடைந்தனர்… அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹல் பகுதியில் எமிலி(63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சை பெற்று வந்த எமிலி திடீரென மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமளிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மருத்துவர்கள் முறையான அனுமதியுடன் அவரது கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை எடுத்து தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் 6 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு இறக்கும் முன்பு உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் முன்பு எமிலி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ஆட்சியர் அருணா, மருத்துவமனை முதல்வர், இருப்பிட மருத்துவ அலுவலர், மயக்கவியல் மருத்துவர் கார்த்திக், தாசில்தார் சரவணகுமார் என பலரும் பங்கேற்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக எமிலி உடல் உறுப்பு தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!